பாலிவுட் சினிமாவில் கேரக்டர் ரோல் , வில்லன் ரோல் என நடித்து நட்சத்திர நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இவர் 2010ஆம் ஆண்டு ஜைனப் எனும் ஆலியா அஞ்சனாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு கடந்த ஓராண்டாக தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
அவ்வப்போது அவரது மனைவி அவதூறு குற்றங்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துவார். அந்தவகையில் தற்போது கணவரால் என் மகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, “ஒரு பொறுப்பற்ற தந்தையாக, ‘நீங்கள் என் மகளை உங்கள் மேனேஜருடன் வேறு நாட்டுக்கு அனுப்பி, எனக்கு தெரியாமலும், சம்மதம் இல்லாமலும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தீர்கள்.
அப்போது உங்க மேனேஜர் எனது மகளை தகாத முறையில் பலமுறை கட்டிப்பிடித்தார், அவள் எதிர்ப்புகளை மீறி இவை அனைத்தும் செய்யப்பட்டன. நானோ நீங்களோ இல்லாதபோது உங்கள் மேனேஜர் இதனை செய்துள்ளார் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
நீங்கள் இன்னும் அவரை கண்மூடித்தனமாக நம்புவதாகக் கூறினீர்கள். என் மகளைப் பெற்ற தாயாக நான் என்ன நடந்தது என்பதை எதிர்த்தபோது எங்களை அச்சுறுத்தினீர்கள் அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.