தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம்,ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதையும் படியுங்க: முடிவுக்கு வந்த ‘சுஷாந்த்’ வழக்கு…முக்கிய அறிக்கையை தாக்கல் செய்த CBI.!
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால்,இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை,அதற்குப் பதிலாக பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவித்தது .
சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக படப்பிடிப்பு பூஜை முடிவடைந்து,படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது காஸ்டியூம் விசியம் தொடர்பாக உதவி இயக்குநருடன் நயன்தாரா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர்.சி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும்,மேலும் நயன்தாராவை மாற்றி, கதாநாயகியாக தமன்னாவை தேர்வு செய்யலாம் என தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். சென்னை: சென்னை,…
என் வீட்டில் ஊற்றிய மலம், தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம் என…
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
This website uses cookies.