அந்த நடிகர் கொடுத்த அழுத்தத்தால் கமலுடன் நடிக்க மறுத்த நயன்தாரா : அந்த நடிகர் யாருனா அவருக்கு பின்.. இவருக்கு முன்!

நடிகை நயன்தாரா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் பத்திரிகையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய சினிமாவிலும் செல்வாக்கு மிக்க நடிகையாக உள்ளார். ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா, பல கஷ்டங்களுக்கு பிறகு உச்ச நடிகையாக வலம் வருகிறார்.

தோல்விகளாலும் அவமானங்களாலும் செதுக்கப்பட்டவர்தான் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகர் சிம்புவுடன் காதல் உறவில் இருந்தார் நயன்தாரா. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டார் சிம்பு. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நயன்தாரா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்யவும் முயன்றார். ஆனால் பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது மனைவி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதையடுத்து பிரபு தேவாவுடனான முறித்துக்கொண்டார்.

இதையடுத்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நடிகை நயன்தாரா. அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். கடந்த ஜூன் மாதம் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.

இதனால் கடந்த சில மாதங்களாகவே நடிகை நயன்தாரா பேசு பொருளாக உள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் நயன்தாரா மீண்டும் பேசு பொருளாகியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.

அதில் பேசியிருக்கும் அவர், ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவனை தனக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் வைத்துக்கொண்டார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். மருமகளாக செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் செய்துள்ளார்.

நயன்தாராவுக்காகவே படங்கள் ஓடுகின்றன. அந்த காலத்து ஹீரோயின்களை போல பண்பட்ட நடிகையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு சில ஆண்டுகள் ஆர்யாவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் மலையாளிகள் என்பதால் நெருக்கமாக பழகினர். ஆர்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நயன்தாரா, அவர் கதை கேட்டு ஓகே சொன்ன பிறகுதான் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார்.

நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்தார். காரணம், கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவருடன் நடிக்க மறுத்தார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அதையும் பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார் நயன்தாரா. இவ்வாறு நயன்தாரா குறித்த தகவல்களை கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

15 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.