தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் LIC என்ற படத்தை இயக்கி வருகிறார். காதல் கலாட்டா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான இசையினை அனிருத் செய்ய, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தயாரிப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளது. இப்படம் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அக்காவாக நடிக்கப்போகும் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த ரோலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் லலித் குமார் கூறிவிட்டாராம்.
காரணம் இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முன்னதாகவே திட்டமிட்டிருந்தார்களாம் அதனால் நயன்தாராவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என கூறியதாகவும் வேண்டுமானால் தனது சம்பளத்தை நயன்தாரா குறைத்துக்கொள்ளட்டும் அப்படியில்லையெனில் அவருக்கு பதில் வேறொரு நடிகையை நடிக்க வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டார்கள்.
இதை கேட்டு ரசிகர்கள் கணவர் படத்திலே நயன்தாராவை ஒதுக்கிவிட்டார்களா? என கேட்டு வருகின்றனர். எனவே இனிமேல் நயன்தாரா தான் முடிவு எடுக்கவேண்டும். கணவருக்காக அவர் சம்பளத்தை குறைப்பாரா? அல்லது வேண்டாம் என கூறிவிடுவாரா? என்பது இனிமேல் தான் தெரியும்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.