நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.
அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .
அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதனிடையே, இன்று திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கனெக்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக புரமோஷன் பேட்டியின் போது, மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை தாக்கி பேசி இருந்தார். “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன், லிப்ஸ்டிக் போட்டு, முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா தாக்கி பேசி இருந்தார்.
அந்த விஷயம் குறித்து தற்போது பேட்டியில் நயன்தாரா பதிலடி கொடுத்துள்ளார், “அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.”
“சோகமாக இருக்க கூடாது என என்றுடைய இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்” என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இதனிடையே, நடிச்சதே 3 படம் அதுக்குள்ள நயன்தாராவை பற்றி கிண்டலடிக்கிறியா? என்றும், ஏய் பவுடர் மூஞ்சி அவ்வளவுதான் என்றும் நெட்டிசன்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.