மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், கான் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இதுவரை மகன்களின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த இந்த தம்பதி தற்போது பால்கனியில் அமர்ந்து மகன்களின் முகம் தெரியும்படி குழந்தைகளை கட்டியணைத்தபடி எடுத்துக்கொண்ட அழகான போட்டோ ஒன்றை வெளியிட்டு, “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என நயன்தாராவின் பெயரை இனிஷியலாக வைத்துள்ளனர். காரணம், “N” ( Nayanthara ) என்பது உலகின் சிறந்த தாயை குறிக்கிறது என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும், இது பெயர் இது? எப்படி ஸ்கூல்ல அட்டனன்ஸ் எடுப்பாங்க? என்றெல்லாம் ட்ரோல் செய்துள்ளனர். மேலும், பொதுவாக பிள்ளைகளுக்கு தந்தை பெயரை தானே இனிஷியலாக வைப்பார்கள் என்று விமர்சித்து வருகின்றனர். சிலர் என்ன இது விஜய் ஆண்டனி பாடல் வரி போல இருக்கிறது என்று கேலி செய்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறி சென்ற நெட்டிசன்ஸ், ” நடிகரும் நயன்தாராவின் முன்னாள் காதலருமான பிரபு தேவா இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் குழந்தைகளின் முகத்தை காட்டியிருப்பது ஏன்? ஒருவேளை இன்னும் அந்த நினைப்பில் தான் இருக்கிறாரோ நயன்? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.