நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.
தற்போது கன்னடம் – ஆங்கில மொழியில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தமிழில் அவருக்கு ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது.
இதையும் படியுங்க : பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை… மாஸ் கூட்டணியுடன் வெளியான அறிவிப்பு!
குறிப்பாக தற்போது இவர் நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி வருகிறார்.
பட பூஜையின் போது பங்கேற்ற நடிகை மீனாவை நயன்தாரா கண்டுகொள்ளாதது பெரும் சர்ச்சையாக வெடித்தது. எவ்வளவோ பேச முயன்றும் மீனாவை நிராகரித்துள்ளார் நயன்தாரா.
இதனிடையே பூஜையின் போது நடிகை ரெஜினா செல்பி புகைப்படம் எடுத்தார். அதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, டிடி என எல்லோரும் இருந்தனர். அந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நயன்தாரா, கேரவனுக்கு போய் ரெஜினாவுக்கு போன் செய்து கண்டபடி திட்டியுள்ளார்.
என் அனுமதியில்லாமல் எப்படி என்னை போட்டோ எடுக்கலாம் என கூறி விளாசியுள்ளார். அழுகாத குறையாக ரெஜினா மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் படத்தின் இயக்குநர் சுந்தர் சி புலம்பி தவித்து வருகிறாராம்.
என்னதான் டாப் நடிகையாக இருந்தாலும் இயக்குநர், சீனியர் நடிகர்களுக்கு மரியாதை தர வேண்டும், ஆனால் நயன்தாரா யாருக்கும் மதிப்போ மரியாதையோ தராமல் நடந்து கொள்வது அவரின் வீழ்ச்சி பாதைக்குதான் வழிவகுக்கும் என பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.