மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியிருந்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்ட போது ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் விலகினார். காரணம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தை இயக்கும் பொறுப்பை சுந்தர் சியிடம் ஒப்படைத்தார்.
இதுவரை சுந்தர் சி நயன்தாராவை இயக்கியதில்லை. இதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், படத்தின் பூஜை விழா பேசுபொருளாக மாறியது. காரணம், விழாவில் பங்கேற்ற நடிகை மீனாவுக்கு நயன்தாரா மரியாதை கொடுக்காமல் போனது.
இதனால் இவர்களை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. மீனா போட்ட இன்ஸ்டா ஸ்டேட்டஸ், நயன்தாராவை பற்றித்தான் என பரவலாக பேசப்பட்டது. மீனாவை அவமதித்ததால் நயன்தாராவை வைத்து இயக்கமாட்டேன் என சுந்தர் சி, தனது மனைவி குஷ்புவிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்க: ரஜினிக்கு டூப் போட்டு நடித்த மனோஜ் : எந்த படத்துக்கு தெரியுமா?
இப்படி மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
சுந்தர் சி எப்படிப்பட்டவர் என எல்லோருக்கும் தெரியும். திறமையான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. தேவையில்லாமல் படம் குறித்து வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது எல்லாம் திருஷ்டி எடுத்த மாதிரி ஆகிவிட்டது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நிச்சயம் அடுத்த பிளாக் பஸ்டர் தான் என பதிவிட்டுள்ளார்.
எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குஷ்பு இப்படி பதிவு செய்துள்ளாரா அல்லது, பெரிய பட்ஜெட் என்பதால் படத்துக்கு தேவையில்லாத விமர்சனம் வந்ததுவிடக்கூடாது என்பதற்காக பதிவிட்டாரா என நெட்டிசன்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.