தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
தனது மகன்களுக்கு அன்னப்பிராசனம் விழா நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மகன்களா இது? சீக்கிரத்தில் இப்படி வளர்ந்திட்டாங்களே என வியந்து கூறி வந்தனர்.
இதனிடையே, நயன்தாராவின் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். குழந்தைகளுக்கு என வேகமாக வளரும் மருந்து கொடுத்துள்ளீர்களா? என கமெண்டுகளை குவித்த வண்ணம் இருந்தது. பெரும்பாலான கமெண்டுகள் குழந்தைகள் 11 மாத காலத்தில் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்து உள்ளனர் என்பதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இதனால் கோபம் அடைந்த நயன்தாரா தனது இரு ஆண் குழந்தைகளுடன் கெத்தாக வீடியோவை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.