ஏஐ தொழில்நுட்பத்தில் பாடல்கள்; எனக்கு பிடிக்கலப்பா; ஓப்பனாக சொன்ன பாடகி நீத்தி,..

நீத்தி மோகன் தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர்.வித்தியாசமான அனைவரும் விரும்பும் குரல்வளம் உடையவர்.தமிழில் ‘தெறி’ படத்தில் ‘செல்லக் குட்டி’, ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்’, ‘லிங்கா’ படத்தில் ‘மோனா கேஸோலினா’ போன்ற பாடல்களைத் தன்னுடைய பாணியில் கணீர் குரலில் பாடி கவனம் ஈர்த்தவர்.

செயற்கை நுண்ணறிவு (AI) இப்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்போது பல பாடல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி பேசிய பாடகி நீத்தி மோகன், “இன்று AI தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் கால் பதிக்கத் தொடங்கிவிட்டது.இசைத் துறையிலும் பல்வேறு வகையில் பயன்பட்டு வருகிறது. AI, ரோபோடிக்ஸ் போன்று எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் இசைக் கலைஞர்கள், பாடகர்களின் தனித்தன்மையை அதில் கொண்டு வரமுடியாது.பாடகர்கள் தங்களின் இதயத்திலிருந்து உணர்வு பூர்வமாக ஆன்மாவிலிருந்து பாடலைப் பாடுகிறார்கள்.அந்த ஆழமான உணர்வை ஒருபோதும் தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பம்பா பாக்கியா, ஷாஹுல் ஹமீது குரல்களை ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்த குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றது குறித்தும் பேசியவர், ” முறையாக அனுமதி பெற்றது பாராட்டத்தக்க விஷயம். ஆனால், மறைந்தவர்களின் குரலை பயன்படுத்துவதில் சில சட்டப்பிரச்னைகளும் இருக்கின்றன.

சிலர் அதை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. இனி வரும் காலங்களில் இதற்குத் தெளிவான சட்ட வரையறைகளைக் கொண்டு வர வேண்டும். என்னதான் இருந்தாலும் AI தொழில்நுட்பம் கலையை அந்நியப்படுத்துகிறது வித்தியாசமாய் உணர வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று கூறியிருக்கிறார்.

Sudha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

7 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

7 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

8 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

8 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

8 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

9 hours ago

This website uses cookies.