என்ன தான் இருந்தாலும் விஜய் விஜய் தான்… ரஜினியிடம் கூட தளபதியை விட்டுக்கொடுக்காத நெல்சன்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு கதை சொன்னார். அதில் அவர் காக்கா என கூறியது நடிகர் விஜய்யை தான் தகவல்கள் பரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இதனால், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே சோசியல் மீடியாவில் வார்த்தை மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆனால், விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை மோசமாக தரைகுறைவாக விமர்சித்து வெறுப்பை கக்கினர். தற்போது அஜித் vs விஜய் மாறி ரஜினி Vs விஜய் என நிலைமை ஆகிவிட்டது.

இவர்கள் இருவரின் ரசிகர்கள் என்ன தான் அடித்துக்கொண்டாலும் ரஜினி விஜய் ரெண்டு பேரும் பழையமாதிரி நன்றாகவே பழகி வருகிறார்கள். ஆம், விஜய் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கு போன் போட்டு , படம் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என கூறி வாழ்த்தினராம். ஜெயிலர் வெற்றிக்கு முழு முழுக்க விஜய் தான் காரணமாம். ஆம், நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ரஜினிக்கு கதை சொல்ல நெல்சனை ஊக்குவித்து அனுப்பினராம் விஜய். எனவே அவர்கள் இருவரும் எந்த போட்டி பொறாமையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள் இதற்கிடையில் ரசிகர்கள் தான் வீண் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

‘பீஸ்ட்’ விமர்சனங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யிடம் ‘சார் என் மேல உங்களுக்கு எதும் கோபமா?’ என நெல்சன் கேட்டேன். அதற்கு அவர், “படம் எடுத்தோம். சிலருக்கு பிடித்திருக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை. அவ்ளோதான். அடுத்த முறை வேறுமாதிரி படம் பண்ணலாம். நான் எதுக்கு உன் மீது கோபமாக இருக்கப் போகிறேன்?. உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா? நீ இப்படி என்னிடம் கேட்பது கஷ்டமாக உள்ளது என விஜய் கூறினாராம். ஜெயிலர் வந்ததும் முதலில் அவர் தான் என்னைப் பாராட்டினார். வாழ்த்து தெரிவித்தார்” என நெல்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

என்ன தான் இருவரது ரசிகர்கள் பிரிவினை உண்டாக்கி வெறுப்பை வெளிப்படுத்தினாலும் நெல்சன் விஜய் மீது எப்போதும் மரியாதை அன்பை வைத்துள்ளார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுத்தாலும் நெல்சன் எந்த ஒரு இடத்திலும் விஜய்யை விட்டுக்கொடுக்காமல் பேசுவது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள புரிதலையும் உறவையும் வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார். நெல்சன் ரஜினியிடம் கூட விஜய்யை விட்டுக்கொடுக்கமால் இருப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதை வெளிப்படுத்துகிறது.

Ramya Shree

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

7 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

8 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.