சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியான திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். அதே சமயம் படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி இருந்தனர்.
மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!
மேலும், ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் லால் சலாம் படம் படு தோல்வியை சந்தித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. படம் வெளியாவதற்குமுன் பயங்கரமாக பில்டப் கொடுத்த ஐஸ்வர்யா ரிலீசுக்கு பின் ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதாவது, லால் சலாம் படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் தொலைந்துவிட்டதாகவும், அது இருந்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக கொடுத்திருக்க முடியும் என்றும் கூறியிருந்தார். இதனை கடுமையாக நெட்டிசின்கள் ட்ரோல் செய்து இருந்தனர்.
கடந்த மாசம் முழுவதும் திருப்பதி, காசி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று எடுத்த புகைப்படங்களையும் ஓம் நமச்சிவாய என பேப்பரில் எழுதிய புகைப்படத்தையும் பதிவிட்டு வந்தார். இதனை பார்த்தவர்கள் இவ்வளவு இடத்திற்கு செல்கிறீர்களே Hard Disk கிடைத்ததா என கேள்வி கேட்டு, கிண்டல் அடித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.