பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி.
பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், சின்மயிடம் செய்தியாளர்கள், அப்போதே சொல்லி இருக்கலாமே என்றும் அவரை திருமணத்திற்கு அழைத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வியை எழுப்பிய நிலையில், பெரிய அரசியல் பலம் வைரமுத்துவிடம் இருந்ததால் அதை அப்போது கூற முடியவில்லை என்று சின்மயி பதிலளித்து இருந்தார். சின்மயிக்கு பிறகு தான் பல நடிகைகள் மீ டூ மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீடு குறித்தும் அதன்மூலம் புகார் அளிப்பவர்கள் குறித்து பிரபல நடிகை வெண்ணிற் ஆடை நிர்மலா பேட்டியொன்றில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
அதில் அவர், அந்தகாலத்தில் மீ டூ மாதிரியான பிரச்சனைகள் இல்லை என்றும் மீ டூ என்பது ஒரு கன்றாவியான விசயம் என்றும், ஏதோ தனக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்று தானே அதற்கு ஒத்துக்கொண்டு செல்கிறார்கள்.
அந்த மனிதர் பேரன் பேத்திகளுடன் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார். இப்போதைக்கு வந்து பேசுகிற அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் வேலை நடக்க வேண்டும் என்று போனவர்கள் அப்போதே என்னவோ செய்துவிட்டு அப்பவே ஏன் பேசாமல் இருந்தார்கள் என்று சரமாறியாக கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.