சினிமா / TV

ரூ.67,000-க்கு டிக்கெட் வாங்கியும் 5 பேர் மட்டுமே பார்த்த விடாமுயற்சி.. எங்கு தெரியுமா?

தென்காசியில், விடாமுயற்சி படத்தின் ரசிகர் மன்ற காட்சிகளுக்கு யாரும் முன்வரவில்லை என ரசிகர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசன்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம், 1996ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக் டவுன்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு, அவரது ரசிகர்கள் தங்களது பேராதரவினை அளித்து வருகின்றனர். மேக்கிங்கில் கச்சிதமாக இருந்தாலும், இது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றே கலவையான விமர்சனங்களில் அறிய முடிகிறது. மேலும், ரசிகர்களும் தியேட்டர் வாசல்களில் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம், சங்கன்கோவிலில் உள்ள ஒரு தியேட்டரில் படம் முடித்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் தனியார் செய்தி தொலைக்காட்சி தரப்பில் ரிவீவ் கேட்கப்பட்டு உள்ளது, அப்போது, கை நிறைய டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டே அந்த இளைஞர் பேட்டி அளிக்கிறார்.

அதில், “67 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினோம். 5 பேர் மட்டுமே படம் பார்த்துள்ளோம்” என்கிறார். அதற்கு, “ஏன் இப்படி ஆனது?” என செய்தியாளர் கேட்க, “ரசிகர் மன்ற டிக்கெட் எடுத்து வைத்தோம், ஆனால் யாரும் வரவில்லை” என்கிறார் இளைஞர். மீண்டும், “ஏன் அவர்கள் வரவில்லை?” என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு, “அவர்களுக்கு இதுபற்றி தெரியாது” எனக் கூறியதும், அருகில் உள்ள இளைஞர் மைக்கைப் பிடுங்கி, “அப்படியெல்லாம் கிடையாது. ரசிகர்கள் அவ்வளவாக வரவில்லை. டிஜே மற்றும் மேளம் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதையும் ரத்து செய்துவிட்டனர்” எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி கதை: அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட அஜித் – த்ரிஷா வாழ்க்கையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து விடுவதாக முடிவெடுத்த நிலையில், தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக அஜித் காரில் அழைத்துச் செல்கிறார்.

இதையும் படிங்க: பதுங்கி பாய்ந்தாரா அஜித்…ரசிகர்களை கவர்ந்ததா விடாமுயற்சி…படத்தின் திரை விமர்சனம்..!

இவ்வாறு செல்லும் வழியில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அப்போது, அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் அர்ஜுன் – ரெஜினா தம்பதி, அவர்களுக்கு உதவும் வகையில் த்ரிஷாவை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் ஒரு கபேயில் இறக்கிவிடுவதாக உறுதியளிக்கின்றனர்.

ஆனால், கார் சரியானதும் அந்த கஃபேவுக்குச் செல்லும்போது, அங்கு தனது மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடையும் அஜித், இறுதியில் தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடிக்கிறாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

Hariharasudhan R

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

20 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

33 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

57 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

2 hours ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.