கேரளாவை சேர்ந்தவரான நடிகை ஓவியா தென்னிந்திய சினிமா படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .
அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்தியதோடு அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. நடிகை ஓவியா மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். களவாணி திரைப்படத்தில் நடித்து 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
அந்த திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த ஓவியாவுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை அடுத்து மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா , கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம் , மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களில் ஓவியா நடித்திருக்கிறார் பிக் பாஸ்க்கு பிறகு அவரது கதை தேர்வு சரியில்லாததால் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார் ஓவியா .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிகை ஓவியா “சேவியர்” என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க ஓவியா ஹீரோயின் ஆக நடிக்கிறார் .
இவர்களுடன் பிரபல நடிகரான விடிவி கணேஷ் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் ஓவியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதையடுத்து இந்த படத்தின் மீதான ரசிகர்கள் கவனம் தற்போது அதிகரித்திருக்கிறது. முன்னதாக ஹர்பஜன் சிங் பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவுக்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.