நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்வில், கானா பாடகி இசைவாணி “ஐ எம் சாரி ஐயப்பா… உள்ளே வந்தா தப்பாப்பா” என்ற பாடலை பாடினார். இந்த பாடல் ஐயப்பன் குறித்தும், கடவுள் நம்பிக்கை குறித்தும் இழிவுப்படுத்தும் விதமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடல் இணையத்தில் பரவலாக டிரெண்டாகிய நிலையில், பலர் அதனை கண்டித்தனர். குறிப்பாக, நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டதை குறிப்பிடுவோரும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை கேள்வியாக எழுப்பினர்.
“கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இசைவாணிக்கு ஒரு நியாயமா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பெரிதாக எழுந்தது. இந்த விவகாரத்தில், கானா இசைவாணி மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான நீலம் பண்பாட்டு மையத்துக்கு எதிராக கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: HM காரில் விழுந்த துடைப்பம்.. மாணவருக்கு எலும்பு முறிவு.. அரசுப் பள்ளியில் தொடரும் அவலம்!
ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும், இந்து கடவுள் ஐயப்பன் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களை இழிவுபடுத்தியதாக புகார் கூறியுள்ளனர். நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.