நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்வில், கானா பாடகி இசைவாணி “ஐ எம் சாரி ஐயப்பா… உள்ளே வந்தா தப்பாப்பா” என்ற பாடலை பாடினார். இந்த பாடல் ஐயப்பன் குறித்தும், கடவுள் நம்பிக்கை குறித்தும் இழிவுப்படுத்தும் விதமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடல் இணையத்தில் பரவலாக டிரெண்டாகிய நிலையில், பலர் அதனை கண்டித்தனர். குறிப்பாக, நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டதை குறிப்பிடுவோரும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை கேள்வியாக எழுப்பினர்.
“கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இசைவாணிக்கு ஒரு நியாயமா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பெரிதாக எழுந்தது. இந்த விவகாரத்தில், கானா இசைவாணி மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான நீலம் பண்பாட்டு மையத்துக்கு எதிராக கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: HM காரில் விழுந்த துடைப்பம்.. மாணவருக்கு எலும்பு முறிவு.. அரசுப் பள்ளியில் தொடரும் அவலம்!
ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும், இந்து கடவுள் ஐயப்பன் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களை இழிவுபடுத்தியதாக புகார் கூறியுள்ளனர். நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.