கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் vj தீபிகா. இவர் மேக்கப் போடுவதால் முகத்தில் நிறைய பருக்கள் ஏற்பட்ட நிலையில், இவரை தொடரில் இருந்து வெளியேற்றிவிட்டனர். சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்ய வாய்ப்பு கொடுத்தும் தன்னால் முடியவில்லை எனஅவரே கூறியிருந்தார்.
சீரியலில் இருந்து வெளியேறிய பின் vj தீபிகா யூடியூப் பக்கம் தொடங்கி நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க மீண்டும் வாய்புபு வந்துள்ளது.
இதனிடையே, சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களுடைய லுக்கை வைத்து தான் ரிஜக்ட் செய்தார்கள், ஆனால் இப்போ உங்க லுக் நன்றாக இருப்பதால், மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அழைக்கிறார்கள்.
உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது? என்றும், இந்த சீரியலில் நடிக்கும் ஆஃபரை நீங்கள் ஏற்பீர்கள் என தான் நினைக்கவில்லை என்று தெரிவித்தும், இந்த ஆஃபரை நீங்கள் ரிஜக்ட் செய்திருந்தால் உங்கள் மீது இன்னும் மரியாதை வந்திருக்கும் என கமெண்ட் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த விஜே தீபிகா, நம்மள விட்டு ஒன்னு போயிடுச்சுனா அதுக்கு யார் காரணம்னு யோசிச்சி ரிவஞ்ச் எடுக்குறதுக்கு பதில, கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியாளராக இருக்குறதுதான் நல்ல முடிவு என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜே தீபிகாவின் இந்த பதிலை ஆமோதித்த பல ரசிகர்கள், “உங்களை ரிஜக்ட் பண்ணியிருந்தாலும் மீண்டும் உங்களை அந்த கதாபாத்திரத்துக்கு அழைக்கும் வகையில் நீங்கள் இருந்துதான் உங்கள் கடின உழைப்பை காட்டுகிறது” என பாசிடிவாக தெரிவித்து வாழ்த்தி உள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.