பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பரினீதி சோப்ரா முதலீட்டு வங்கியியல் வேலை பார்க்க விரும்பி லண்டன் சென்று படித்தார். பரினீதி படிப்பை முடித்துவிட்டு 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். அந்த நேரம் இந்தியாவில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் இருந்தது, எனவே அவர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்தார்.
பின்னாளில் அந்த நிறுவனம் அவரை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது. 2011 ஆம் ஆண்டில் Ladies vs Ricky Bahl எனடர் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் திரைப்படமே ஹிட் அடித்தது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பாடகி. பாலிவுட் திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார்.
இவர் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஐ.பி.எல் கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டனர். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளனர். இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என நெருங்கியவர்கள் மட்டும் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்ப்போது பரினீதி சோப்ரா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த திருமண புகைப்படங்களைக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.