கஷ்டப்பட்டப்போ யாருமே உதவிக்கு வரல.. பருத்திவீரன் குட்டி ப்ரியாமணி உருக்கம்..!

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

பருத்திவீரன் படத்தில் குட்டி பிரியாமணியாக நடித்தவர் கார்த்திகா தேவி. அதன்பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அண்மையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும், தங்கள் ஊரில் சிலர் படத்தில் நடிப்பார்கள் என்றும், அவர்கள் மூலமாக தான் தனக்கு பருத்திவீரன் படத்தின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பள்ளியில் வைத்து என்னை உட்பட என் வயது போன்ற சிறுமிகளை போட்டோ எடுத்தார்கள். அதில் என்னை தேர்வு செய்தார்கள். அறியாத வயசு பாடல் சின்ன வயது முத்தழகுக்காக எடுக்கப்பட்டது. எனக்காக இளையராஜா சார் பாடல் பாடியிருப்பார் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அப்போது எனக்கு அது ஒன்றும் தெரியலை, தான் தேர்வானது தன் அப்பாவுக்கே தெரியாது. அப்பாவுக்கு தெரிந்தால் விடமாட்டார் என்பதால் அவரிடம் கூறவில்லை. சொல்லாமல் கூட வந்துட்ட என்று கோபப்பட்டார். ஆனாலும், அவருக்கு தான் நடிப்பது பெருமை தானே என்று ஏற்றுக் கொண்டார்.

பணமில்லாத காரணத்தால் வீட்டு பக்கத்தில் உள்ள சிலிண்டர் கம்பெனியில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்தோம். அப்பா உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார். அதன் பிறகு அத்தை வந்து அவருடைய மகனுக்கு தன்னை திருமணம் செய்து வைத்தார். தானும் அக்காவும் ஒரே வீட்டில் தான் திருமணம் செய்து வாழ்கிறோம்.

ஆடு மாடு மேய்ப்பதை என் கணவர் பார்த்துக்கொள்வார். கடை ஒன்றை வைத்து உள்ளோம். அதைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விஜய் டிவியில் சீரியலுக்கு வந்து கேட்டார்கள். சென்னை போக வேண்டும் என்பதற்காக என்னால் அதில் நடிக்க முடியவில்லை.

நானும் என் குடும்பமும் கஷ்டத்தில் இருந்த போது பருத்திவீரன் படத்திற்கு நடிக்க அழைத்து சென்றவர்களிடம் நிலையை சொல்லி உதவி கேட்டோம். ஆனால், யாரும் அப்போது கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

10 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

11 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

12 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

12 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

12 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

12 hours ago

This website uses cookies.