விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.
சீசன் 2 நிகழ்ச்சி ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். மக்கள் அவர்களின் ஆசைப்படி இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.
இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவி.
இந்நிலையில் பவித்ரா தன் வாழக்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் பவித்ரா, ” தன்னுடைய சிறுவயதிலிருந்து தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தன்னுடைய அம்மாவிற்கு இந்த விஷயம் பிடிக்காது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “அம்மா தன்னை எப்போதும் நன்றாக படிக்க சொல்லுவார் என்றும், தானும் அம்மா படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நன்றாக படிக்க தொடங்கியதாகவும், தான் சென்னைக்கு வந்த பிறகு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, அப்போது முகம் மற்றும் கால்கள் மோசமாக அடிபட்டு இருந்தது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “தன்னுடைய முகத்தில் ஆபரேஷன் நடந்து முடிந்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்க கூட பிடிக்கவில்லை என்றும், இந்த விபத்து குறித்து தன்னுடைய அம்மாவிடம் ஆரம்பத்தில் கூறவில்லை” என பவித்ரா உருக்கமாக தெரிவித்துள்ளார் .
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.