தமிழக அரசியல்வாதிகள்,இந்தி மொழியை ஏற்க மறுக்கின்றனர்,ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை மட்டும் விரும்புகிறார்கள் என்று ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்க: கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தி திணிப்பை எதிர்ப்பது,பிற மொழிகளை வெறுப்பது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஜன சேனா கட்சியின் 12ஆம் ஆண்டு விழாவில் பேசும் போது பவன் கல்யாண்,இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் இருப்பது நல்ல விஷயம்,மொழி பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,ஆனால் சிலர் சமஸ்கிருதத்தை விமர்சிக்கின்றனர்,தமிழக அரசியல்வாதிகள் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் என புரியவில்லை.
ஆனால் அவர்கள் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள்,பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை,ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லை,இது என்ன வகையான லாஜிக்? என்று கேள்வி எழுப்பினார்.
பவன் கல்யாணின் இந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார்,அவர்,இந்தி மொழியை எங்களின் மீது திணிக்காதீர்கள் என்று கூறுவது,வேறு மொழிகளை வெறுக்கிறோம் என்று அர்த்தமல்ல,தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையுடன் காக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாணின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தமிழ் திரையுலகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தியில் டப் செய்யப்படும் திரைப்படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்கான கட்டாயம் இல்லை,ஆனால் இந்தியை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
This website uses cookies.