தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போதெல்லாம் பலகோடி போட்டு எடுக்கப்படும் திரைப்படம் போன்று சீரியல்களை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிடுகிறார்கள். அதில் பல சீரியல்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து TRP’யின் உச்சத்தில் இருந்து வருகிறது.
ஆனால், ஒரு சில சீரியல்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கிறது. ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்களின் வெறுப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. கிராமத்தில் பிறந்து வளரும் ஹீரோயின் வெண்ணிலாவிற்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என கனவோடு இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
இதனால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து கல்லூரியில் படிக்கிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர் மீது அவருக்கு காதல் வர இருவரும் வெளியில் எங்கும் சந்தித்தால் மாணவி – ஆசியருடன் காதல் என்பது கொச்சையாக பார்க்கப்படும் என்பதால் காருக்குள்ளேயே காதல், ரொமன்ஸ் எல்லாம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோ சூர்யா வெண்ணிலா கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போதே திடீரென தாலி கட்டிவிடுகிறார்.
இதனால் அவர்களுக்குள் சின்ன சண்டை ஏற்படுகிறது. பின்னர் வெண்ணிலாவை சமாதானம் செய்து கிராமத்திற்கு கூட்டி வரும்போது ஒரு ரவுடி கும்பலிடம் மாட்டிக்கொண்டு காரை வைகோல் புத்தருக்குள் கொண்டு விடுகிறார். அதில் முழு காரும் ஒளிந்துக்கொள்ள அவர்கள் பல நாட்களாக காரிலே குடும்பம் நடத்துகிறார்கள். அவ்வளவு ஏன் ஹீரோயின் குளிக்கவேண்டும் என்று சொல்ல ஹீரோவும் அதற்கு காருக்குள்ளே ஏற்பாடு செய்து குளியலும் போடுகிறார்கள்.
மேலும் கதையை எப்படி நகர்த்துவதென்றே தெரியாமல் காருக்குள்ளேயே பல நாட்களாகவே காட்சிகள் ஓட்டுகிறது. இதனை நெட்டிசன்ஸ் விமர்சித்து காருக்குள்ளேயே குடும்பம் நடத்தி குளியல் போட்டுட்டாங்களே என பங்கமாக ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். அத்தோடு இவர்கள் பண்ணும் ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை. எனவே நலன் மனசு வச்சி அந்த சீரியலை இத்தோடு நிறுத்திக்கொண்டாள் அவங்களுக்கும் நல்லது பார்க்கும் மக்களுக்கும் நல்லது என பலர் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.