90ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்தமான ஒரு தொகுப்பாளர் என்றால் அது பெப்ஸி உமாதான். அவருடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாதாரணமாக ஒரு போன் காலில் பேசி உங்களுக்கு பிடித்த பாட்டை சொன்னால் அவர்கள் ஒளிப்பரப்புவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் வட்டம் உண்டு.
இந்த நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் உமா. அவர் கடைசியில் சொல்லும் Keep Trying. Keep Trying Better Luck Next Tume என்ற வசனம் இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும்.
அவரின் முகத்தோற்றம், குரல் என அவரை பிடிக்க பல காரணங்களை 90ஸ் கிட்ஸ்கள் கூறுவார்கள். இப்படி கனவுக்கன்னியாக இருந்த உமா சினிமா உலகம் ஏன் விட்டு வைத்தது என யோசிப்பீர்கள்?
ஆனால் சினிமா உலகம் அவரை விட்டு வைக்கவில்லை. அவருக்கு சினிமா வாய்ப்புகள் கொட்டிக்கிடக்க, தனக்கு டிவி வாழ்க்கையே போதும் என சினிமாவை திரும்பி கூட பார்க்கவில்லையாம்.
புகழின் உச்சத்தில் இருந்த பெப்சி உமாவிற்கு பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்திலும், கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்திலும், நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியே போன் செய்து நடிக்க அழைப்பு விடுத்தும். பெப்சி உமா பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
மேலும், பல கோடிஸ்வரர்கள் பெப்சி உமாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நேரத்தில், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பெப்சி உமா விலகிவிட்டாராம். மேலும், ஒரு பிரபல அரசியல்வாதி பெப்சிமாவை அடிக்கடி தொந்தரவு செய்தும் உமா மறுத்துவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பெப்சி உமாவிற்கு டார்ச்சர் செய்ததாகவும் அப்போதே, தகவல்கள் வெளியானது.
இதனிடையே, தொழிலதிபரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் பெப்சி உமா செட்டிலாகி விட்டார். அண்மையில் விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய பெப்சி உமா ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, மதுரையிலிருந்து தீவிர ரசிகர் ஒருவர் பெப்சி உமாவிற்கு பார்சல் ஒன்றை அனுப்பியிருந்தாராம். அந்த பார்சலில் வெட்டப்பட்ட நிலையில், ஒரு சுண்டு விரல் இருந்ததாம். அதை பார்த்து பதறிப் போன பெப்சி உமா அந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அதோடு, தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பதால் அந்த பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் அனைத்தும் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.