நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி பயோபிக் படமாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியைப் படம் கொண்டிருப்பதால், சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்று (நவ.15) அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்று உள்ளனர்.
இதையும் படிங்க: எட்டி உடைத்த நடிகர்…. கதறி அழுத சினேகா – தனுஷ் படத்தில் இவ்வளவு கொடுமையா?
இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரையரங்கின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.