நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி பயோபிக் படமாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியைப் படம் கொண்டிருப்பதால், சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்று (நவ.15) அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்று உள்ளனர்.
இதையும் படிங்க: எட்டி உடைத்த நடிகர்…. கதறி அழுத சினேகா – தனுஷ் படத்தில் இவ்வளவு கொடுமையா?
இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரையரங்கின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.