பிரபல பின்னணி பாடகி நேற்று இரவு அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்ட நிலையில் மீட்கபட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிஜமாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் கல்பனா. கடந்த சில நாட்களாக அவரது வீட்டின் கதவு பூட்டியே இருப்பதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
இதையடுத்து குடியிருப்பு வாசிகள் சங்கத்துடன் கதவை தட்டிய போது திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே பார்த்த போது மயங்க கிடந்த கல்பனாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிகளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர் எதற்காக இந்த தற்கொலை முயற்சியை எடுத்தார் என்பது தெரியவில்லை.
நேற்று இரவு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட கல்பனா தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கல்பனா ஐதராபாத்தில் தனியாகத்தான் இருந்துள்ளார். அவரது கணவர் சென்னையில் வேலை நிமித்தமாக வந்ததால் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்போது கல்பனாவுடன் அவரது தோழியும் சக பாடகியுமான சுனிதா உடன் உள்ளார்.
அண்மையில் கல்பனாவுடைய மகளுக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தில் இருந்தே அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழ், தெலுங்கு, மலையாள சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று வருகிறார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.