ஒவ்வொரு வருடமும் 30 கோடியை ஏழைகளுக்கு கொடுக்கும் நடிகர்.. டாப் ஹீரோக்கள் பார்த்து கத்துக்கோங்க..!
Author: Vignesh24 ஜூலை 2024, 6:11 மணி
பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்படி பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு உதவுவதை பார்த்து ரசிகர்களும் அவ்வப்போது அவர்களது மன்றங்கள் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அமிதாப்பச்சன், சல்மான்கான், சோனு சூட் தொடங்கி தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலனுக்காக நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவுட் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறாராம். அதாவது, இந்திய திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மகேஷ்பாபு 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர் தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்கு செலவிடவதாக கூறப்படுகிறது.
0
0