எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது முயற்சியால், தனது திறமையால் மட்டுமே வளர்ந்து உச்ச நட்சத்திர நடிகராக இன்று வளர்ந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன் .
இவர் திரைப்படங்களின் ஹீரோவாக வருவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அங்கிருந்து கொண்டே தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவராக பார்க்கப்பட்டார்.
இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக தடம் பதித்தார். தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ , சீமா ராஜா , வேலைக்காரன் , நம்ம வீட்டுப் பிள்ளை , டாக்டர், மாவீரன் , அயலான் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகராக இடம்பிடித்தார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது. இதை அடுத்து எஸ் கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்த பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் . சிவகார்த்திகேயன் புது படத்தில் நடிக்க இருக்கிறார்.
டாக்டர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் கைகோர்த்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இப்படத்தை குறித்து கூடுதலான சுவாரஸ்ய தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா கமிட் ஆகியிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.