அடுத்தடுத்து பிரபலங்கள் கடந்த 2024ஆம் வருடம் விவாகரத்து பெற்றது, பிரிந்து வாழ்வது என முடிவெடுத்த செய்திகள் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.
இதில் முக்கிய நட்சத்திர தம்பதிகள் ஜிவி பிரகாஷ் – சைந்தவி. இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இசைக்கலைஞர்கள் என்பதால் எந்த வித எதிர்ப்பு இல்லாமல் திருமணம் நடந்தது.
இதையும் படியுங்க : 21 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராஃப் : சிலிர்க்க வைத்த AI வீடியோ!
இருவருக்கும் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடை வைத்தது. இருப்பினும் இருவரும் இணைந்து கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.
இருவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் பரவின. முக்கியமாக பேச்சுலர் படத்தில் நடித்த போது, ஜிவி பிரகாஷ்க்கும், திவ்ய பாரதிக்கும் ஏற்பட்ட நெருக்கம் தான் என பேசப்பட்டது.
இந்த நிலையில் திவ்யபாரதி இது குறித்து ஓபனாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் சாரும், சைந்தவி மேடமும் திடீரென பிரிந்தது வருத்தம் தான். ஆனால் இருவரும் கச்சேரியில் ஒன்றாக பாடியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நம்மை வைத்து யாரும் பேசமாட்டாங்க என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதிகமாக பேசுகிறார்கள்.
அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நான் கெடுத்துடேன், எனக்கும் ஜிவிக்கும் காதல் என பெண்களே என்னை திட்டி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது எதுவுமே பதில் சொல்லக்கூடாது என கடந்து வந்துவிடுகிறேன் என ஓபனாக கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.