தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால், கண்டிப்பாக சலார் படத்தின் மூலம் மாஸ் காம்போ கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், பிரபாஸின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது புகைப்படத்தில் வழுக்கை தலையுடன் இருக்கும் பிரபாஸை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், பிரபாஸின் ஹேட்டர்கள் போட்டோஷாப் செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். இதுதான் பிரபாஸின் உண்மையான புகைப்படம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.