உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது .கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பெப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். மேலும் பல அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் உட்பட பல பிரபலங்களும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்து கொண்டதாகவும்,அங்கே புனித நீராடுவது போல புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: ட்ராகன் படக்குழுவில் ஏற்பட்ட திடீர் சோகம்…ஆறுதல் சொல்லிய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து…!
அதனையடுத்து கன்னட சினிமாவை சேர்ந்த பிரசாந்த் சம்பர்கி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் புனித நீராடும் புகைப்படத்தை பகிர்ந்து,பிரகாஷ்ராஜ் செய்யும் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புவதாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,மதவெறியர்கள் மற்றும் கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவது தான்,அவர்களின் புனிதமான விழாவில் கூட இப்படி போலியான செய்தியை பரப்புகிறார்கள்,இது மிகப்பெரிய அவமானம்,அவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துளேன் என பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.