காதலரை பிரிந்த பிரியா பவானி சங்கர்.. காரணம் இதுதானா? பயில்வான் போட்டுடைத்த உண்மை..!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இந்நிலையில், திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், பிரியாபாவனி சங்கர் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர், ஆபாசமான கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை, குடும்ப பாங்கான ரோல்களில் தான் நடித்து வருகிறார்.

இதனால் எதார்த்தமாக தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார். தனது புது பங்களாவில் காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால், பிரியா பாவனி சங்கருக்கும் அவரது காதலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த பிரியா, தனது நெருங்கிய தோழிகளிடம், என் காதலர் என்னை ஏமாற்றி விட்டார், நான் நினைத்த மாதிரி அவர் இல்லை என்று புலம்பி இருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே, நடிகர்களுடன் நெருங்கி நடிக்க வேண்டும், வெளியூரில் படப்பிடிப்புக்காக பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் இது எல்லாம் தேவையில்லை என்று நினைத்த பிரியா பவானி சங்கரின் காதலன், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகும்படி காதலன் கூறியுள்ளார். ஆனால் பிரியா பாவனி சங்கர் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

15 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

15 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

17 hours ago

This website uses cookies.