சினிமா / TV

பாவிங்க… 55 நாள் நைட்டு பகலா என்ன வச்சு செஞ்சாங்க…. நடிகை பிரியா பவானி ஷங்கர் வேதனை!

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்தில் நடித்த மோசமான அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். ஒரு பெரிய ஹீரோவோட படத்துல நான் நடிச்சேன். அதை இப்ப நெனச்சா எனக்கு சிரிப்பு தான் வருது. கிட்டத்தட்ட 55 நாள் வெயில் மழைன்னு பாக்காமல் ஷூட் பண்ணி முடிச்சிட்டு டப்பிங்ல போய் பார்த்தா ஒண்ணுமே இல்லை.

அதை பார்த்து எனக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு. என்கிட்ட நீங்க சொன்ன கதை என்ன? இங்க எடுத்து வச்சிருக்கிறது என்ன? அப்படின்னு பயங்கரமா ஷாக் ஆயிட்டேன். என்ன வச்சி அவ்ளோ ஷூட் பண்ணாங்க அந்த காட்சிகள் எல்லாம் எங்க என்று கேட்டதற்கு அதெல்லாம் மியூசிக்ல வரும் அப்படின்னு சொன்னாங்க. கேட்டதும் எனக்கு பக்குனு ஆகிடுச்சு.

ஒரு படத்தோட கதையை படிக்கிறது கேட்கிறது எல்லாமே ஸ்க்ரீனுக்கு வந்துடும் அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்லயே அதை ஓரளவுக்கு ரியலைஸ் பண்ண ஆரம்பிச்சிடலாம். இருந்தாலும் என்னால் ஏத்துக்குவே முடியல. அப்படி இருந்தும் நான் கேட்டபோது அதெல்லாம் மியூசிக்கில் வரும் அப்படின்னு சொன்னாங்க பாரு….அங்க தான் கடுப்பாச்சு.

இதையும் படியுங்கள்: மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்…. பூஜையிலே இம்புட்டு அளப்பறையா?

நான் ஹீரோவுக்கு போன் பண்ணி அவர்கிட்ட கேட்டேன் …. 125 நாள் சூட் பண்ண என்னோட காட்சிகளே இல்ல நானே அமைதியா தான் இருக்கேன் என்று பதில் அளித்தார். அத நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு அதே நேரத்துல சிரிப்பாவும் இருக்கு என பிரியா பவானி சங்கர் மிகுந்த வேதனையோடு தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

Anitha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

10 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

11 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

11 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

12 hours ago

This website uses cookies.