டிரெஸ்ஸை கழட்டி காட்ட சொன்ன இயக்குனர்.. தரமான பதிலடி கொடுத்த முன்னணி நடிகை..!

2002ல் நடிகர் விஜய் நடிப்பில் தமிழன் வெளியான படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து பாலிவுட் பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா திகழ்ந்து வருகிறார்.

இதனிடையே, உலக புகழ் பெற்ற பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் இவரைவிட குறைந்த வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது பல சர்ச்சையாகவும் அந்த சமயத்தில் மாறியது. மேலும், திருமணத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து வாடகைத்தாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்று பிரியங்கா சோப்ரா வளர்த்து வருகிறார்.

இதனிடையே, பாலிவுட்டில் தனக்கு பின் அரசியல் நடப்பதாக தெரிவித்தும், பாலிவுட் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தும் பிரியங்கா சோப்ரா பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், பல நிகழ்ச்சிகளில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கவும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தும் பிரியங்கா சோப்ரா பேசியும் வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடெல் படத்தில் படு மோசமான கவர்ச்சியாகவும் போல்ட்டான பெண்ணாகவும் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஒரு இயக்குனரால் 2002 – 2003 காலக்கட்டத்தில் தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த செயல் வேதனை அளிப்பதாகவும் பகிர்ந்துள்ளார். அப்போது பாலிவுட் படம் ஒன்றில் ரகசிய ஏஜெண்ட் ரோலில் நடித்து இருந்ததாகவும் அதில், ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கட்டதாவும், அதில் நடிகருடன் நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டதாகவும், பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.

மேலும், அந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய உள்ளாடையுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், தன்னுடைய ஸ்டைலிஸ்-ஐ அழைத்து ஆடையை கழட்டி உள்ளாடையை காட்டச்சொன்னதாகவும் அதை பார்த்து தான் ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் இயக்குனர் கொச்சையாக பேசியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உள்ளாடையுடன் நடிக்க மறுத்ததாகவும், 2 நாட்கள் நடித்த நிலையில் உன் படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்து விலகியும் இருக்கிறார். இந்த சம்பவத்தால் அந்த இயக்குனரின் செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும், தனது வேதனையை 20 ஆண்டுகள் கழித்து பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

Poorni

Recent Posts

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

15 minutes ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

22 minutes ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

52 minutes ago

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

2 hours ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

2 hours ago

This website uses cookies.