ரூ.15 லட்சத்தை அபேஸ் செய்து அலைய விடும் ரவீந்தர்.. கடும் கோபத்தில் மகாலட்சுமி..!

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியலில் கலக்கி வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ளும் வைக்கும் வகையில் இருந்தாலும், இவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டி தான் வருகிறார்கள்.

அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயமே. கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி உருவக்கேலிக்கு ஆளாகி பல எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவிந்தர் கடந்த ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி 20 லட்ச ரூபாயை பணமாக கேட்டுள்ளார். நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் தன்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை பெற்றுக்கொண்டு ரவீந்தர் இதனை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தனக்கு தன்னுடைய பணம் மட்டும் வந்தால் போதும் என்று கூறிவிட்டு இரண்டு தவணையாக ரூபாய் 15 லட்சத்தினை வங்கி கணத்தில் செலுத்தியும் உள்ளார்.

பின்னர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு விடுமுறை, செக் அனுப்பி இருக்கிறேன், நெஃப்ட் போட்டு இருக்கிறேன், என்று பல காரணங்களை தெரிவித்து AVOID செய்தும் வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த விஜய் சில ஆதாரங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து சென்னை கமிஷனருக்கு புகார் ஒன்றினையும் அளித்தும் உள்ளார். மேலும், விஜயின் மனைவியை ரவீந்தர் மிகவும் தவறாகவும் தரைக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகும் விஜய் தரப்பில் புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து ரவீந்தர் தரப்பில் கூறுகையில், 15 லட்சம் வாங்கியது உண்மை தான் ஆனால், இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு முடியாமல் இவ்வாறு தன்னிடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விஜயின் உறவினர்கள் வந்தால் செக் கொடுத்து விடுவேன் என்று கூலாக பதிலும் அளித்துள்ளார்.

இந்நிலையில், ரவீந்தர் இந்த பணத்தை அளித்த பின்பு தான் தனது திருமண தேதியை அறிவிக்கப் போவதாக பேசிய ஆடியோ ஒன்றை விஜய்யும் லீக் செய்துள்ளார். தற்போது இந்த பிரச்சனையில் மகாலட்சுமி ரியாக்சன் மற்றும் அவர் கொடுக்கும் பதில்கள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Poorni

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

16 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

16 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

17 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

17 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

18 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

18 hours ago

This website uses cookies.