தெலுங்கு திரையுலகில் முன்னனின் நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன்.இவருடைய நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதிலும் குறிப்பாக இப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்.
தற்போது இதனுடைய இரண்டாம் பாகமான “புஷ்பா 2 தி ரூல்” டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகிறது.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
இதையும் படியுங்க: பிரபல நடிகருக்கு டாக்டர் பட்டம்…குவியும் பாராட்டுக்கள்…!
இந்நிலையில் மும்பையில் நடைப்பெற்ற நிகழ்வின் போது அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ARMY என அழைத்துள்ளார்.மேலும் இந்த படம் வெற்றி பெற்றால் என் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது “GREEN PEACE ENVIRONMENT AND WATER HARVESTING FOUNDATION”தலைவர் ஸ்ரீனிவாஸ் என்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் ARMY என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்றும்,ராணுவத்தினர் நாட்டை பாதுகாப்பவர்கள்,ரசிகர்களை அவ்வாறு அழைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.இந்த செய்தி தற்போது சினிமா ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.
மதுரையில், பிரியாணிக்கு ஆசைப்பட்டுச் சென்ற 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் உச்ச நடிகராக உயர்ந்தவர் நடிகர் அஜித். முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.…
சென்னையில் நடைபெறவுள்ள பிரபுதேவா டான்ஸ் கான்செர்ட்டில் இருந்து நடிகை சிருஷ்டி டாங்கே விலகியுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை: இது…
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து ஊரறிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு…
எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை…
சென்னையில், இன்று (பிப்.21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கு…
This website uses cookies.