பொதுவாக சினிமாவை பொறுத்தவரை சக நடிகர், நடிகைகள் நட்பாக பழகி படத்தில் சிலர் நடித்துக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு சிலர் ஈகோவின் காரணமாக சக நடிகர் நடிகைகளை மட்டமாக நினைத்து சண்டை போட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான ஒரு படத்தில் நடந்த சம்பவம் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 2006 இல் வெளியான ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் தான் நடித்த நடிகைகளுக்கு சண்டை வந்து பெரிய பிரச்சனையானது.
நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி என்ற இரு நடிகைகள் சண்டையிட்டு கொண்டனர். இருவருக்கும் ஒரு காட்சியில் இணைந்து நடிக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் கூறி இருக்கிறார். ஆனால், இருவருக்கும் தலைகனம் அதிகரிக்க சேர்ந்து நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க மாட்டோம் என்று சூட்டிங் ஸ்பாட்டில் கூறியதோடு, யார் பெரிய நடிகை யாரோட மார்க்கெட் பெரியது என்று சண்டையிட்டு வாக்குவாதமும் செய்துள்ளனர். அது தலைக்கேறி இரு நடிகைகளும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையும் போட்டு இருக்கிறார்கள்.
அதன் பின்னர் பட குழு சமாதானம் செய்து ரணகளத்தை அடக்கி இருக்கிறார்கள். பின் எவ்வளவோ முயற்சி செய்தும் இருவரும் ஒன்றாக நடிக்க மறுத்ததால் தனித்தனியாக நடிக்க வைத்து படத்தினை பட குழுவினர் வெளியிட்டனர். ஆனால், அப்படம் வெளியானது கூட தெரியாமல் தயாரிப்பாளருக்கே பெரிய நஷ்டத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.