தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
பொதுவாக, திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.
விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்பு சண்முக பாண்டியன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் அவருக்கு அது கை கொடுக்கவில்லை. விஜய், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அவர்களை சினிமாவில் உயர்த்தி விட்டவர் விஜயகாந்த்.
ஆனால், அவருடைய மகன் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் உதவ யாரும் இல்லை என்ற பேச்சு சமீப காலமாக மீடியாவில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில், சினிமாவில் பலருக்கு உதவியவர் விஜயகாந்த் நிறைய ஹீரோக்கள் படங்களில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அவரது, மகன் சண்முக பாண்டியன் எனக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது. ஷண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தற்போது, ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வருவோம் படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திரை உலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ் போலவே இன்னும் பலரும் சண்முக பாண்டியனுக்கு கை கொடுக்க வேண்டும் என கூறியும் வருகிறார்கள். குறிப்பாக விஜய் போன்ற நட்சத்திரங்கள் இதை செய்ய வேண்டும் என்பது ரசிகர்கள் பலருடைய கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.