ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியை கடுமையாக சாடி இருந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியினரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்க இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் அப்போது ஏற்பட்டது.
இதன் காரணமாக ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் குறித்தும் சீமான் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இது முடிந்து 4 ஆண்டுகளான நிலையிலும், இரு தரப்பும் தற்போது முரண்பாடான நிலையே கடைப்பிடித்து வந்தனர். இதனிடையே கடந்த வாரம் ரஜினி யோகி ஆதித்யநாத் சந்திப்பு குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது, பலரும் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்தவர் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி இமயமலை செல்கிறார் என்றும், யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது அவரது சொந்த விருப்பம் என தெரிவித்தார். மேலும், அவரை தொல்லை செய்யக்கூடாது எனது கூறிய சீமான் ரஜினிகாந்த் காலில் விழுந்து விட்டதால் வெங்காய விலை ஏறிவிட்டதா என ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார்.
இந்த வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அதில் அண்ணன் சீமானுக்கு நன்றிகள் என பதிவிட்டு ரஜினிகாந்த்துக்கு எதிராக நீங்கள் பேசியதால்தான் தானும் தங்களுக்கு எதிராக பேசினேன் என முந்தைய விவகாரத்தை குறிப்பிட்டார். மேலும், சீமான் ரஜினி குறித்து அன்பாக பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி அதே அன்புடன் தானும் சீமானை நேரில் சந்திக்க வருகிறேன் என குறிப்பிட்டு அண்ணன் சீமானுக்கு மீண்டும் நன்றிகள் என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.