இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தின் பாகம்-2 இயக்கயிருப்பதாக பி.வாசு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்காக நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நாம் கேள்விப்படும் விஷயங்களை தாண்டியும் பல நல்ல நல்ல செயல்களை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ருத்ரன் படத்தின் இசை வெளியிட்ட விழாவிலும் அப்படியொரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது, KPY பாலாவிடம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார். ராகவா லாரன்ஸ் போலவே எளிய மக்களுக்கு பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாலாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரூ. 10 லட்சம் தொகையை அவருக்கு வழங்கியதால் மேடையிலேயே பாலா மிகவும் நெகிழ்ந்துபோனார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.