தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ரகு தாத்தா”
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள “ரகு தாத்தா” திரைப்படத்தை கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹாம்பலோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் “பொண்ணா அடக்கமாலா இருக்க முடியாது” என்று டயலாக் பேசி சுதந்திரப் பறவையாக சுற்றி தெரியும் பெண்ணாகப். நடித்துள்ளார். மேலும் விருப்பமே இல்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ளும் காட்சிகளில் கீர்த்தி சுரேஷுக்கு அப்ளாஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ:
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.