லோகேஷின் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. ரஜினி கொடுத்த “நச்” பதில்..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர். முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில், தலைவர் 171 படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: கையில் கிளாஸுடன் கூலாக குடித்தபடி.. பர்த்டே கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா..!

முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், ரஜினி மற்றும் விஜய் இடையே தான் சம்பள விசயத்தில் போட்டி நிலவுகிறது. அதாவது, ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்திற்காக ஷேர் தொகை உட்பட மொத்தம் 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் குட்டி கிருஷ்ணன் யார் தெரியுமா?.. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்..!

இதனிடையே, நடிகர் விஜய்க்கு கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிக்க அவருக்கு 250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக பேச்சு அடிபட்டது. இதன் மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல் விஜய் முதல் இடத்தை பிடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை தட்டிப் பறித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது, அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள கூலி படத்திற்காக அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் 250 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. அந்த டீசரில் ரஜினிகாந்த் நடித்த தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பாடலை இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தநிலையில், தனது பாடலை உரிய அனுமதி பெறாமல் ராயல்டி செலுத்தாமல் பயன்படுத்தியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தற்போது, ரஜினிகாந்த் மும்பையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அப்போது, அவரிடம் இளையராஜா கொடுத்த நோட்டீஸ் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.