இதுதான் கர்மா… உதயநிதிக்கு எதிராக கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் : ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன #நான்தான்டாரஜினிகாந்த்.. காரணம் தெரியுமா?!!

சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறி பற்றி எரிந்தது. மறுபுறம், ட்விட்டரில், திடீரென ரஜினி ரசிகர்கள் உதயநிதிக்கு எதிராக கொந்தளித்து ட்ரெண்ட் செய்தனர். என்ன காரணம்?

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதிக்கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல, பள்ளி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) தாய்லாந்து வழியாக லண்டன் சென்றதாக தகவல் வெளியானது.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி போராட்டம் கலவரமாக மாறி பற்றி எரிந்துகொண்டிருக்க ‘சின்னவர்’ உதயநிதி எங்கே என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சித்தனர்.

இதனிடையே உதயநிதி இன்று தனது ட்விட்டர் கணக்கில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் #நான்தான்பாஉதவாக்கரைஉதய் மற்றும் #நான்தான்டாரஜினிகாந்த் ஆகிய ஹேஷ்டேக்குகளில் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்துக்கு வந்தது. ரஜினி ரசிகர்கள் திடீரென உதயநிதிக்கு எதிராக கொந்தளிக்க என்ன காரணம் என்று பதிவுகளை ஆராய்ந்தபோது தான் விடை தெரிந்தது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒரு நல்ல விஷயத்துக்காக மக்கள் 100 நாள் போராட்டம் நடத்தினார்கள். கலெக்டர் ஆஃபிசை தாக்கியது. குடியிருப்புப் பகுதிகளை எரித்தது அப்பாவி மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடைய வேலைதான் இது. போராட்டம் நடத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கருத்துக்கு அன்றைக்கு திமுகவினரும் அவர்கள் கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

இதைவைத்துதான் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், சமூக விரோதிகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, ரஜினி கூறியது எவ்வளவு உண்மையானது என்று ரஜினி ரசிகர்கள் பதிவிட்டனர். மேலும், உதயநிதியை விமர்சித்து பதிவிட்டு கொந்தளித்தனர். இதைத்தான் கர்மா என்று கூறுவார்கள் என நெட்டிசன்கள் அதையும் விமர்சித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

12 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

12 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

13 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

14 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

15 hours ago

This website uses cookies.