சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்தது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் பிரவேசம் குறித்து ரஜினியின் உண்மையான எண்ணம் என்ன? என்பது குறித்து பேசியுள்ள பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர், ” உண்மையில் சொல்லப்போனால் விஜய் வருவதில் ரஜினிக்கு பொறாமை தான். ஒரு காலம் ரஜினி விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்.
நம்மால் பண்ண முடியாத விஷயத்தை நம்மை விட சிறியவன், ஜூனியர் ஒருத்தன் பண்றானே என்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி என்னதான் அமைதியானவர், நல்லவர் என பலர் கூறினாலும் விஜய் அரசியலுக்கு வருவது அவருக்கு மனதார ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இதற்காக அவர் பல காலம் முயற்சித்து தலைக்கூட காட்ட முடியாத அளவிற்கு பின்வாங்கிவிட்டார். தற்போது அவரை போல் ஒருவர் அரசியலுக்கு வருவது ரஜினி பெருத்த அவமானமாக தான் உள்மனதில் நினைப்பார் என்பது தான் அப்பட்டமான உண்மை என வித்தகன் கூறியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.