சினிமா / TV

படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!

படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு ரஜினிகாந்த் தூக்கிச் சென்ற சம்பவத்தை அந்நடிகையே விபரமாக கூறியுள்ளார்.

ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் எஜமான். 1993ல் வெளியான இந்த படம் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது.

மீனா, ஐஸ்வர்யா, நெப்போலியன், விஜயகுமார் என பலர் நடிக்க இளையராஜா இசையில் பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில பேசிய நடிகை ஐஸ்வர்யா, நான் எஜமான் படத்தில் நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது.

நான் எப்போதும் ரஜினியை அங்கிள் என்று தான் கூப்பிடுவேன். சிறுவயதில் இருந்தே கூப்பிட்டு பழக்கம். அப்போது ‘உரக்க கத்துது கோழி’ பாட்டுக்கு நான் தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட எத்தனை பக்கெட் என்றே தெரியவில்லை, அந்த பாட்டுக்காக நான் தண்ணீரை வாரி வாரி இரைத்தேன். சூட்டிங் முடிந்த நிலையில், எனக்கு பயங்கர காய்ச்சல், பொள்ளாச்சியில் குடிசை போன்ற வீடுகள் அதிகம். படப்பிடிப்பு பக்கத்தல் குடிசை இருந்தத. அதற்குள் வெதுவெதுப்பாக இருந்ததால் நான் அங்கு சென்று காய்ச்சலால் தூங்கி விட்டேன்.

இயக்குநர் அடுத்த டேக் எடுக்க என்னை அழைக்க, எல்லோரும் என்னை காணவில்லை என தேடினார்கள். ஆனால் ரஜினி அங்கிள், நான் இருக்கும் குடிசையை பார்த்துவிட்டார்.

உடனே வா, இயக்குநர் கூப்பிடுறாரு என என்னை தொட்டு அழைத்தார். அப்போது தான் அவருக்கு தெரிந்தது எனக்கு ஜூரம் என்று. உடனே என்னை அப்படியே காரில் தூக்கி போட்டு பொள்ளாச்சியில் இருந்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்தார். இது என் வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

11 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

12 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

12 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

12 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

13 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

13 hours ago

This website uses cookies.