நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. நாளை ரிலீஸை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதற்கு காரணம் படம் எதிர்பார்த்தது போன்று வரவில்லை எனவும் இது ஒர்க்அவுட் ஆகாது என்றும் அப்செட் ஆகிவிட்டாராம். மேலும் முழு படத்தை பார்த்த ரஜினி படம் குறித்து எதுவுமே சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாராம். உடனடியாக அமைதி பயணமாக இமயமலைக்கு சென்றுவிட்டார் என செய்திகள் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் ரஜினி மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி தன்னுடைய ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினாராம். ரஜினி காட்சி படமாக்கி முடித்த பின்னர் ஜாக்கி ஷெராப் காட்சி படமாக்க படக்குழு தயாராகிக்கொண்டிருந்த நேரம் அது.
அப்போது காரில் இருந்து இறங்கி வந்த ரஜினி ஷாக்கி ஷெராப்பிடம் ” மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் சொல்லாமலே கிளம்பிட்டேன். வேண்டுமென்றால் உங்களுக்காக இருக்கிறேன் என சொன்னராம்.” இதனை பேட்டி ஒன்றில் ஷாக்கி ஷெராப் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ரஜினி எனது நீண்ட நாள் நண்பர். அவர் எனக்கு பல வருடத்திற்கு முன்னிருந்தே பழக்கம். என்னுடைய திருமணத்தில் கலந்துக்கொண்ட வெகு சிலரில் ஒருவர் ரஜினி. அதை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இந்த பட வாய்ப்பு கிடைத்ததும் ரஜினிக்காக மறுக்கவே முடியவில்லை. அதனால் ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.