நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானது. கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.
தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில நெல்லையில் ஜெயிலர் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தியேட்டரில் பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் பெரும் ரகளை செய்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் காவல் துறையினர் சட்டத்தை மீறி செயல்பட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், ” அந்த நபர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் கைது செய்தோம். பெத்த அம்மா காலில் போல் பால் ஊற்ற வேண்டும். படிக்க நூலகம் வர சொன்னால் வர மாட்டார்கள். ஆனால், இங்கே பால் அபிஷேகம் செய்வதை ஏற்று கொள்ள முடியாது. மேலும் ரகளையில் ஈடுபட்டு சட்டத்தை மீறி செயல்பட்டதால் தக்க தண்டனை கொடுக்கப்படும் என கூறியதால் தியேட்டரில் சில நிமிடம் பதற்றம் ஏற்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.