பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் தனது மகளின் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார். ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்று ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டாராம்.
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் டாப் 10 பணக்கார்களில் ஒருவரான அம்பானி சூப்பர் ஸ்டார் ரஜினியை தன்னுடைய கம்பெனி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்காக பல கோடி சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தாராம். ஆனால், அந்த பல கோடி ஆஃபரை வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.
இனி நம்முடைய நட்பு தொடர வேண்டும் என்றால், விளம்பரத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்காதீர்கள் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.
குளிர்பான விளம்பரத்தை தவிர்த்து இன்று வரை அவர் எந்த விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்தது இல்லை.
தன்னால் எந்த ஒரு விஷயமும் மக்களுக்கு தவறாக ப்ரொமோட் ஆகி விடக்கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் அவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.