நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்க: மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?
சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் சில இடங்களில்,ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக தவறான தகவல்கள் பரவி வந்தன.இதனால் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதால்,நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எங்கள் நிறுவனம் எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நியமிக்கவில்லை.எங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி,ஏதேனும் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் பணம் கேட்டு மோசடி செய்ய முயன்றால்,அவற்றை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வருகிறார்,இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அதேபோல்,அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவுள்ள அவருடைய அடுத்த படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.