90ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி , போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அருணாச்சலம் படத்தில் ரம்பாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படங்களில் கவர்ச்சியாக வலம் வந்த ரம்பாவை ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.
ரம்பா கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். தொடர்ந்து 90ஸ் மற்றும் 20ஸ் ஆரம்பத்தில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார். பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், ரம்பா புது வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அதன் கிரகப்பிரவேசம் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், ரம்பாவின் கணவர் அவரைப் பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக கோலிவுட்டில் பரபரப்பாக முணுமுணுக்க படுகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்யப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. என் கணவர் என்னை இன்ஸ்டாவில் பின்தொடரவில்லை தமன்னாவை தான் பாலோ செய்கிறார் என்று ரம்பா முன்னதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய மேஜிக் ஹோம் ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்தார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கமாகிவிட்டார்களாம். மேலும், பிப்ரவரி 9-ம் தேதி இலங்கையில் நடக்கும் கச்சேரி ஒன்றில், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். அந்த விழாவிற்கும் ரம்பா வரும் நிலையில், தமன்னாவும் அங்கு கலந்து கொள்ள இருப்பதால் நடிகை ரம்பா கோபத்தில் உள்ளதாக இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இலங்கைக்கு வந்திருக்கிறார். ரம்பாவின் கணவர் நடிகை தமன்னாவை பார்த்து கட்டி அணைத்த படி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளார். ரம்பாவின் கணவரும் தமன்னாவும் கொஞ்சி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோ மட்டும் ரம்பா கண்ணுல பட்டால் என்ன ஆகுறது என்று பேசி வருகிறார்கள்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.