பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமா நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். டாப் நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே தான். தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெட் கே படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஷாருக்கானுடன் பதான், ஜவான் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்குரம், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.
உமைர் சாண்டு என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து தீபிகாவும் ரன்வீரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டது தான் பாலிவிட்டின் சலசலப்புக்கு காரணம். நட்சத்திரங்கள் குறித்து இணையத்தில் பரவும் வதந்தி வழக்கமானது தான் என்றாலும், இந்த அளவுக்கு பூதாகரமாகி வரும் வதந்தி குறித்து தீபிகாவும், ரன்வீரும் அமைதியாக இருப்பது தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
உடல் நிலைபாதிப்பு அண்மையில் தீபிகாவும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மும்பை பீச் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பும் பிராஜெட் கே படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் பிரிவால் தொடர்ந்து தீபிகா, மனபோராட்டதை சந்தித்து வருவதால்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜோதிடர் கருத்து இணையத்தில் வெளியான இந்த தகவலால் கவலையில் ஆழ்த்துப்போன ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பிரபல ஜோதிடர் ஒருவர், தீபிகாவின் ராசிப்படி சந்திரனும் சுக்கிரனும் சரியான இடத்தில் இருக்கிறது.
இதனால், ரன்வீர்-தீபிகா பிரிய வாய்ப்பு இல்லை. ஆனால், குழந்தை பற்றி நல்ல செய்திக்கு அந்தஜோடி 2024 வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜோதிடரின் அந்த தகவலால் ரசிகர் சற்று பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.